×

சக்கராப்பள்ளி, மதுக்கூரில் முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம், பேரணி

பாபநாசம், மார்ச் 2: பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த சக்கராப்பள்ளி தர்வேஸ் தைக்கால் மில்லத் நகரில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காத்திருப்பு போராட்டம் நேற்று 11வது நாளாக நடைப் பெற்று வருகிறது. இதில் சக்கராப் பள்ளி, அய்யம்பேட்டை, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, வடக்கு மாங்குடி உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட பங்கேற்றனர்.
மதுக்கூர்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடியை கண்டித்தும், டெல்லி சம்பவத்தை கண்டித்தும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூரில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை உரிமை மீட்பு பேரணி நடத்தினர். இந்த பேரணி மதுக்கூர் புதுத்தெருவிலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் சென்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிற மார்க்கெட் ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல் அருகில் முடிவடைந்தது.

பேரணியில் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடிகளை தங்களது கைகளில் ஏந்தி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கைகள் ஏந்தியும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

Tags : Muslims ,Madukkur ,
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...