×

அருப்புக்கோட்டை மேம்பாலத் தடுப்புச்சுவற்றில் காடு போல வளரும் ெசடிகள் கேள்விக்குறியாகும் உறுதித்தன்மை

அருப்புக்கோட்டை, மார்ச் 2: அருப்புக்கோட்டை - மதுரை ரோட்டில் டவுன் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 600க்கு மேற்பட்ட கி.மீ சாலைகளை தனியார் வசம் பராமரிப்பு மற்றும் புதிய சாலைகள் அமைக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் வழியாக மதுரை செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. மேலும் மேம்பாலத்தை அடுத்துள்ள புறநகர் பகுதி மக்கள் டூவீலர்களிலும், நடந்தும் நகருக்குள் வந்து செல்கின்றனர். பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்புச்சுவர் பக்கவாட்டில் செடிகள் மரம்போல் வளர்ந்துள்ளது. தற்போது அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலத்த்தில் முட்செடிகள் புதர் போல் மண்டி உள்ளது. அத்துடன் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
இவற்றின் வேர்கள் உட்பகுதியில் செல்கிறது. இதனால் உட்பகுதியில் மண் தடுப்புச்சுவற்றில் வைக்கப்பட்டுள்ள கற்களைப் பெயர்த்து வெளியில் வந்துள்ளது.

இதனால் பாலத்தின் உறுதித்தன்மை பலம் இழந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை இதுபோன்று பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அவ்வப்போது வெட்டி பராமரிக்க வேண்டும். அதை முறையாக செய்வதில்லை. நெடுஞ்சாலைத்துறை வசம் சாலைகள் பராமரிப்பு செய்யும் போது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பாலத்தின் தடுப்புச்சுவர் பகுதியில் வளரும் செடிகளை சாலைப்பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

தற்போது தனியார் வசம் இருப்பதால் பராமரிப்பு பணிகள் முறையாக செய்வதில்லை. இதனால் தடுப்புச்சுவரில் வளர்ந்துள்ள செடிகள் பாலத்தின் மேல் வரை வளர்ந்துள்ளதால் டூவீலரில் செல்பவர்கள் மட்டுமின்றி பஸ்களின் ஜன்னல் ஓரம் அமர்ந்து செல்வோரின் கண்களைப் பதம் பார்க்கிறது. எனவே, பாலத்தின் தடுப்புச்சுவரில் வளர்ந்துள்ள செடிகளை வேரோடு வெட்டி பராமரிப்பு செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் லட்சக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாலம் இடிந்துவிழும் அபாயம் உள்ளது.

மேலும் காந்திநகர் மதுரை- தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் ஒரு ரயில்வே மேம்பாலம் மற்றொரு பாலம் உள்ளது. இந்த பாலங்களின் தடுப்புச்சுவரிலும் செடிகள் வளர்ந்து முட்புதர்போல் மண்டி கிடக்கிறது. இதனாலும் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்துள்ள முட்செடிகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : plants ,Aruppukkottai Imphal ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்