×

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு நாடுகளில் தச்சர் பணிக்கு அழைப்பு

தூத்துக்குடி, மார்ச் 2: ஐக்கிய அரபு நாடுகளில் தச்சர் பணிபுரிய விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்ற 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ள 35 வயதுக்குள்பட்ட தச்சர் பணி செய்வோர்  (Carpenter  Mould Making or Finishing Products) அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.  தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை பணி அனுபவத்திற்கேற்ப வழங்குவதுடன் இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் சட்டத்துக்குள்பட்ட  இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.

 மேலும், ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய 25 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட கொத்தனார், கார்ப்பெண்ட்டர், பிளம்பர், பெயிண்டர், ஐடிஐ எலக்ட்ரீஷியன் ஆகிய பிரிவுகளில் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அனுபவத்திற்கேற்ப ஊதியம் வழங்குவதுடன் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திற்குட்பட்ட  இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
 விருப்பமும் தகுதியும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி மற்றும் செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omceq80@gmail.com  என்ற மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தின் (www.omcmanpower.com)                                                                                                        மூலமாகவும், 044-22505886, 3220634389, 22502267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thoothukudi District ,United Arab Emirates ,
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!