×

முத்தையாபுரத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம்

ஸ்பிக்நகர், மார்ச் 2: தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் பஜாரில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. காங்கிரஸ் மாநில பேச்சாளர் மஜித் தலைமை வகித்தார். திமுக பகுதிச் செயலாளர் மேகநாதன், தவாக மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், மாவட்ட ஜனநாயக மாதர் சங்க தலைவர் பூமயில், ஆதித்தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் மனோகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அய்யா தர்மயுகவழி பேரவை நிறுவனத்தலைவர் பாலமுருகன் பேசினார்.கூட்டத்தில் ஒய்எம்ஜெ மாநிலதலைவர் அல்தாபி, மமக பொதுச்செயலாளர் அப்துல்சமது, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன், மாவட்டச் செயலாளர் சந்தனராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : protest ,
× RELATED அர்ஜெண்டினாவில்...