×

கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தூத்துக்குடி, மார்ச் 2: கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி நடந்தது. கூட்டுறவு தணிக்கை இயக்குநர் தர் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு கோவில்பட்டியில் 2 நாட்கள் நடைபெற்றது. பயிற்சி வகுப்பிற்கு, நெல்லை மண்டல தணிக்கை இணை இயக்குநர் கணேசன் தலைமை வகித்தார். கோவில்பட்டி சரக உதவி இயக்குநர் முருகேசன் முன்னிலை வகித்தார். பயிற்சி வகுப்பில் ஓய்வுபெற்ற கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் கணேசன் பங்கேற்று, கூட்டுறவு தணிக்கையில் தணிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தணிக்கையின் தரத்தினை மேம்படுத்துதல், பொதுக்கணக்கு முறைகள், தணிக்கை தகவல் மேலாண்மை, தணிக்கையாளர்கள் நடந்துகொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதில், கூட்டுறவு தணிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அலுவலக கண்காணிப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.

Tags : auditors ,
× RELATED சென்னை மாநகராட்சி வரிவிதிப்பு...