×

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் பக்தர்கள் திரண்டனர்

குளச்சல், மார்ச் 2: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருட மாசிக்கொடை விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, சிறப்பு செண்டை மேளம் ஆகியவை நடந்தது. 7.50 மணியளவில் திருக்கொடியேற்றம் நடந்தது. இதில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, எஸ்.பி.நாத், சப் - கலெக்டர் சரண்யா அறி, ஏ.எஸ்.பி. விஸ்வேஸ்.பி.சாஸ்திரி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விஜயகுமார் எம்.பி, திருக்கோயில்கள் இணை ஆணையர் அன்புமணி, கோயில் தந்திரி மகாதேவரு ஐயர், அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு, கல்குளம் தாசில்தார் ராஜாசிங், பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்.தலைவர் மெர்லியன்ட்தாஸ், துணைத்தலைவர் சிவகுமார், ஹைந்தவ சேவா சங்கம், தேவி கலா மன்றம், தேவி சேவா சங்க நிர்வாகிகள்  உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்கம் சார்பில் 83வது சமய மாநாடு கொடியினை தலைவர் கந்தப்பன் ஏற்றி வைத்தார். வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம சுவாமி சைதன்யானந்தா மாநாட்டு பேருரை ஆற்றினார். சுவாமி கருணானந்தா, வள்ளலார் பேரவை சுவாமி பத்மேந்திரா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். மதியம் கருமன்கூடல் கே.எஸ்.வி.பவனிலிருந்து அம்மனுக்கு சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும், 1 மணிக்கு உச்சகால பூஜையும் நடந்தது. மாலை  ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும் நடந்தது. மாசிக்கொடையின் முக்கிய வழிபாடான வலிய படுக்கை பூஜை வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடக்கிறது. 9ம் நாள் இரவு மற்றொரு முக்கிய வழிபாடான  பெரிய சக்கர தீவெட்டி பவனி நடக்கிறது. 10ம் நாள் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Tags : Devotees ,temple ,ceremony ,Mandakkadu Bhagavathyamman ,Masikkodai ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்