×

ஆத்தூர் அருகே முன்னாள் எம்.பி கார் மீது டூவீலர் மோதி 3 பேர் காயம்

ஆத்தூர், மார்ச் 2: ஆத்தூர் அருகே முன்னாள் எம்பி கார் மீது டூவீலர் மோதியதில் 3 வாலிபர்கள் காயமடைந்தனர். ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில், திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி முன்னாள் அதிமுக எம்.பி டாக்டர் காமராஜ், நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேற்று மதியம், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். ஆத்தூர் விநாயகபுரம் பகுதியில் கட்டிட வேலை பார்ப்பதற்காக, வாழப்பாடி அருகே தூக்கியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாபு(30) என்பவர் டூவீலரில், தன்னுடன் வேலை பார்க்கும் அருண் (23), சிவக்குமார் (30) ஆகியோருடன் முன்னான் சென்ற காரை முந்த முயன்றார். அப்போது கார் மீது டூவீலர் மோதியது. இதில், 3 தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட முன்னாள் எம்.பி, அவர்களை மிட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Attur ,
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...