×

செந்தாரப்பட்டியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

ஆத்தூர், மார்ச் 2:  செந்தாரப்பட்டியில்  மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. செந்தாரப்பட்டி பேரூராட்சியில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆத்தூர் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான ரமேஷ் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு