×

மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு வீதி நாடகம்

சேலம், மார்ச் 2:சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவரும், சென்ட்ரல் சட்டக் கல்லூரி செயலாளரும் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமரச தீர்வு வல்லுனருமான வழக்கறிஞர் சரவணன் ஏற்பாட்டின் பேரில், கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்கள் வீதி நாடகம் நடித்து காட்டினர். இதில் பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் பற்றி விளக்கப்பட்டது.

மேலும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச சட்ட உதவிகளையும், அதை பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் பற்றியும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சக்திவேல், தலைமை தாங்கி பேசினார். கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஊர் பொதுமக்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள், சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் சாஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Tags : women ,State Legislature Committee ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது