×

பள்ளிபாளையத்தில் மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசாரம்

பள்ளிபாளையம், மார்ச் 2: கள்ளச்சாரயம் குடிப்பதால் குடும்பம் வறுமையில் வாடுகிறது. உடல் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் பள்ளிபாளையத்தில் மதுவிலக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினர் பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். சேலம் ரேவதி கலைக்குழுவினர் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் உடல்நலன் பாதிப்பு, சமூக அவலம், குடும்ப வறுமை ஆகியவை குறித்து ஆடல்- பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குடிநோயை ஏற்படுத்தும் மதுவை குடிக்கவே கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். பின்னர், மதுவிலக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் மது பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags : school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி