×

தேசிய அளவிலான முகாமில் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட  திரிசாரணர்களுக்கு வாழ்த்துதிருச்செங்கோடு, மார்ச் 2: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஹரியானா மாநிலம் காட்புரியில் 5 நாட்கள் நடைபெற்ற தேசிய அளவிலான ஒருமைப்பாட்டு முகாமில் தமிழகத்தின் சார்பில் பங்குபெற்ற நாமக்கல் மாவட்ட திரிசாரணர்களுக்கு நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  அய்யணன்  சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இம்முகாமில் நடைபெற்ற இந்திய திருமணங்களில் நமது கலாச்சாரம், கண்காட்சி,காட்டாளி சமையல் போன்ற பல்வேறு வகையிலான போட்டிகளில் பங்குபெற்று தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்ற திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரி  திரிசாரணர்கள் விக்கேஷ், பொன்கமலேஷ், சுதர்ஷன், திருச்செங்கோடு சாரணர் படையைச் சேர்ந்த வினோதகன், தரணிதரன், மோகன்குமார் ஆகியோர்களுக்கான சான்றிதழ்களை நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் அய்யணன்  வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தலைமையிடத்து ஆணையர் குமார், திருச்செங்கோடு கல்வி மாவட்டச் செயலர் விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பான பயிற்சி பெற்று திரும்பிய திரிசாரணர்களுக்கு நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார், ரவி, மாவட்ட சாரண இயக்கத் தலைவர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இம்முகாமிற்கு தமிழகத்தின் சார்பில் கலந்துகொள்ள தேர்வுபெற்ற 6 பேரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nationwide Campaign ,
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா