×

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பென்னாகரம்,  மார்ச் 2: ஞாயிறு விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஞாயிறு தினமான நேற்று விடுமுறை என்பதால், ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும், தொங்கும் பாலத்தில் இருந்து மெயின் அருவியின் அலகை ரசித்தும், அருவியில் குளித்தும், முதலை பண்ணை, மீன் பண்ணையை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லில் அதிகளவில் சுற்றுலா பணிகள் குவிந்ததால், பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா