×

முஸ்லிம்கள் ஒரு நாள் நோன்பு

மதுரை, மார்ச் 2: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரை தெற்குவாசல் ஜமாஅத் மற்றும் அனைத்து சமுதாய இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில், மதுரை சின்னக்கடை வீதியில் நேற்று ஒரு நாள் நோன்பு இருந்தனர். மேலத்தெரு ஜமாஅத் தலைவர் கமர்தீன் தலைமை வகித்தார். கீழத்தெரு ஜமாஅத் தலைவர் அலி அக்பர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் லியாக்கத் அலி, செயலாளர் காஜா முகைதீன், பாலமுருகன் (அய்யர் தர்ம புக வழிப்பேரவை) உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தெற்குவாசல் மேலத்தெரு, கீழத்தெரு ஜமாஅத்தார்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : Muslims ,
× RELATED நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை...