வத்தலக்குண்டு, மார்ச் 2: கொடைரோட்டில் இருசக்கர வாகனம் வாடகைக்கு விடும் அலுவலகத்தை கொடைரோடு ரயில் நிலையம் டாக்சி ஓட்டுனர்கள் முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கொடைக்கானல், குமுளி, கம்பம், சுருளி மூணாறு போன்ற சுற்றுலா தலங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட மிகவும் பாரம்பரியமிக்க பழமைையான ரயில் நிலையம்.
இந்த ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து வகையான வாடகை வாகனங்கள் உள்ளன. இதனையே வாழ்வாதாரமாக நம்பி 150க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் உரிமையாளர்கள் உள்ளனர்.