தர்மபுரி, மார்ச் 1: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் -மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தர்மபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. இதில், 5ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில், அனைத்து தொழில் நிறுவனங்களும் கலந்துகொண்டு தகுதியான ஆண்- பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தனர்.