×

மலைப்பாம்பு சிக்கியது

திருவாடானை, மார்ச் 1:  திருவாடானை அருகே அரசூர் கிராமத்தில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. திருவாடானை அருகே அரசூரில் வசித்து வருபவர் சொக்கலிங்கம். இவருக்கு சொந்தமான லாரியை வீட்டின் பின்புறம் நிறுத்தி இருந்தார். அதற்கு கீழே மலைப்பாம்பு ஒன்று படுத்துக் கிடந்தது. இதுபற்றிய தகவல் பேரில் திருவாடானை தீயணைப்பு துறையினர் வந்து மலைப்பாம்பை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர். திருவாடானை பகுதியில் மலை பாம்பு இல்லை. லாரியில் ஜல்லி கற்கள் ஏற்றி வரும்போது வந்திருக்கும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை