×

பைக் விபத்தில் கீழே விழுந்தவர் லாரி மோதி பலி

ஆலங்குளம், மார்ச் 1: ஆலங்குளத்தில் பைக் விபத்தில் கீழே விழுந்த வாலிபர்  பின்னால் வந்த லாரி ஏறி நசுக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் மகன் கலைச்செல்வம்(36). இவர் அடைக்கலாபட்டணத்தில் வல்கனைசிங் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று இரவு கலைச்செல்வம் கடையை அடைத்து விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் ஆனந்த்(38) பைக்கில் வந்து கொண்டிருந்தார்.ஆலங்குளம் மின்வாரியம் அருகே வந்த போது இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் கீழே விழுந்த கலைச்செல்வம் மீது பின்னால் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி வந்த லாரி ஏறியது. இதில் கலைச்செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனந்த் காயமடைந்தார் தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் கலைச்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்த், லாரி டிரைவர் கருவந்தாவை சேர்ந்த அருணாசலம் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : Lorry ,bike crash ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது