×

டவுன் ரயில்வே நகர் பகுதியில் 3.50 லட்சத்தில் கான்கிரீட் சாலை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்,மார்ச் 1: நாகர்கோவில் டவுன் ரயில்வே நகர் பி பிளாக் முதல் தெருவில் கான்கிரீட் ரோடு அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜனிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, அந்த பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹3.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., சாலை அமைக்கும் பணியை  தொடங்கி வைத்தார். கணியாகுளம் ஊராட்சி திமுக செயலாளர் குமாரசாமி, கணியாகுளம் பஞ்சாயத்து தலைவர் ஏஞ்சலின் சரோனா, முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வக்குமார், திமுக ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன்,  எம்.ஜே.ராஜன், கவுன்சிலர் ஷீலா மற்றும் டவுன் ரயில்வே நகர் மக்கள் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Sureshrajan MLA ,concrete road ,Town Railway Nagar ,
× RELATED நாகர்கோவிலில் வாகன ஓட்டிகள் அலைக்கழிப்பு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கண்டனம்