கன்னியாகுமரி,மார்ச் 1: அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது . தேர்தல் ஆணையாளராக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் பிள்ளை செயல்பட்டார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி, மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் சிவராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, முன்னாள் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் வக்கீல் பால ஜனாதிபதி, பேராசிரியர் மகேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.