×

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாகர்கோவிலில் இன்று பாஜ ஊர்வலம்

நாகர்கோவில், மார்ச் 1: குமரி மாவட்ட பா.ஜ தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :  சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனை ஆதரித்தும் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ சார்பில் மாலை 3 மணிக்கு பார்வதிபுரத்தில் இருந்து பேரணி புறப்பட்டு கே.பி ரோடு வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்து எனது தலைமையில் விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொது செயலாளர் முரளிதர்ராவ் கலந்து கொண்டு பேசுகின்றனர். மேலும் கட்சி நிர்வாகிகள், தேசிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வியாபாரிகள்,  விவசாயிகள், வக்கீல்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து பேரணி மற்றும் விளக்க கூட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று குமரி மாவட்ட பாஜ சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Baja ,Nagercoil ,
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...