×

மஞ்சூர் ஊட்டி சாலையோரத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்

மஞ்சூர், மார்ச் 1:மஞ்சூர் குந்தபாலம் அருகே சாலையோர தடுப்பு இல்லாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.    மஞ்சூர் அருகே உள்ளது குந்தா பாலம். மஞ்சூரில் இருந்து ஊட்டி, குன்னூர், எடக்காடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிராதான சாலையாக உள்ளதால் அரசு பஸ்கள், தனியார் வாகனங்களின் போக்குவரத்து மிகுதியாக காணப்படும். குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் அதிகமுள்ளதுடன் சாலையின் ஒரு பகுதியில் கிடு, கிடு பள்ளங்கள் அமைந்துள்ளது. இதையடுத்து விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையோரங்களில் நெடுஞ்சாலைதுறை சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் உடைந்தும் காணமலும் போயுள்ளது. குறிப்பாக, குந்தாபாலம் குடிநீர் தொட்டி அருகே கொண்டை ஊசி வளைவில் சாலையோரத்தில் தடுப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே விபத்துகளை தவிர்க்க இப்பகுதியில் உடனடியாக இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : road ,Manjur Ooty ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...