ராஜபாளையம், மார்ச் 1: ராஜபாளையம் ஆவரம்பட்டி யில் பொதிகை அறக்கட்டளை சக்தி கண் மருத்துவமனை இணைந்து முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் அப்பகுதியில் பொதுமக்களுக்கு கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ஆனந்தராஜ், நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, பொதிகை அறக்கட்டளை நிறுவனர் பெருமாள்சாமி, கண்மருத்துவர் டாக்டர் ராஜேஸ் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.