×

சிவகாசியில் மார்ச் 8ல் பிங்க் மராத்தான் போட்டி

சிவகாசி, மார்ச் 1: பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முற்றிலும் பெண்களே பங்கு பெறும் பிங்க் மாரத்தான் போட்டி 3 மற்றும் 5 கி.மீ. ஓட்டமாக மார்ச் 8ல் சிவகாசியில் நடைபெற உள்ளது. சிவகாசி எஸ்எப்ஆர் மகளிர் கல்லுாரியில் துவங்கி ரயில்வே பீடர் ரோடு, வேலாயுதம் ரஸ்தா ரோடு வழியாக சென்று மீண்டும் கல்லுாரியில் முடிவடைகிறது. போட்டிக்கு ரூ.300 அனுமதி கட்டணமாக பெறப்படுகிறது. 16 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டும் பங்கு பெறலாம். இதற்காக டி-சர்ட் மற்றும் லோகோ வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் கண்ணன் வரவேற்றார்.

அரசன் குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அசோகன் தலைமையில் சங்கர நாராயணன் முன்னிலையில் நளினி அசோகன் லோகோ மற்றும் டி-சர்ட்டினை வெளியிட காளீஸ்வரி குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸ் மல்லிகா செல்வராஜ் பெற்று கொண்டார். இணை செயலாளர் வெங்கடசாமி நன்றி கூறினார். மாரத்தானில் பங்கு பெற 99524 18857 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் www.pinkmarathan.com என்ற இணைய தளத்திலும் பதிவு செய்யலாம்.

Tags : Pink Marathon ,Sivakasi ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு