×

நாட்டு மருந்து கடைகளில் திடீர் சோதனை 2 பேர் கைது

திண்டுக்கல், மார்ச் 1: திண்டுக்கல்லில் உள்ள நாட்டுமருந்து கடைக்காரர்கள் அனுமதியின்றி சந்தனம் மற்றும் கருங்காலி மரத்துண்டுகளை மருத்துவ பயன்பாட்டிற்காக விற்பதாக சென்னையில் உள்ள வனத்துறை விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதன்பேரில், சென்னை வனத்துறை விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் வனத்துறை அதிகாரிகள், நகரில் உள்ள பெரியகடை வீதி, மெயின்ரோடு, அபிராமி அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் நேற்று மாலை திடீர் சோதனை செய்தனர். இதில் கடைகளில் அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த 90 கிலோ கருங்காலி மரத்துண்டுகள், 2 கிலோ சந்தன மரத்துண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் (68), மோகன் (32) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : raids ,
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு