×

திண்டுக்கல் சீலப்பாடியில் ரோலர் ஸ்கேட்டிங்கில் மாணவர்கள் சாதனை

திண்டுக்கல், மார்ச் 1: திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாவட்ட பள்ளிகளுக்கிடையே ஓபன் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் 15 பள்ளிகளை சேர்ந்த 4 வயது முதல் 15 வரை உள்ள மாணவ, மாணவிகள் 100 பேர் பங்கேற்றனர்.
பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அசோசியேஷன் தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Dindigul Seelapady ,
× RELATED சாலை விபத்தில் வாலிபர் பலி