×

தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம்

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. ‘நாம் அனைவரும் இந்திய குடிமக்கள்’ என்ற தலைப்பில் சின்ன கோயில் வளாகத்தில் நடந்த இக்கூட்டத்துக்கு,  தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை வகித்து பேசினார். கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டமைப்பு நிர்வாகி ஹாட்மேன் வரவேற்றார். சிஎஸ்ஐ போதகர்கள் மைக்கேல்ராஜ், ரவி, காங். கட்சி மாநில துணைத்தலைவர் ஏபிசிவீ சண்முகம், திராவிட விடுதலைக்கழக நிர்வாகி பால் பிரபாகரன், கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டமைப்பு செல்வராசு, ஜேம்ஸ்விக்டர், தூத்துக்குடி அரபி கல்லூரி இம்தாதுள்ளாக், தூய மரியன்னை கல்லூரி எழிலரசி, பாஸ்டர் ஜெயராஜ், வக்கீல் அதிசயகுமார், ஜெனட்போஸ்கோ, விடுதலைசிறுத்தைகள் அகமதுஇக்பால் உள்ளிட்டோர் பேசினர். கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டமைப்பு தங்கையா நன்றி கூறினார். கூட்டத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமிய  அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tuticorin ,
× RELATED ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட...