×

கயத்தாறு ஒன்றிய பகுதியில் யூனியன் சேர்மன் மாணிக்கராஜா நன்றி தெரிவிப்பு

கயத்தாறு மார்ச் 1: கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 வார்டு ஒன்றிய கவுன்சிலர்  பதவிகளில் அமமுக கூட்டணி 15 வார்டுகளை கைப்பற்றியது. வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் ஆதரவை பெற்ற அமமுக தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா கயத்தாறு யூனியன் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். தங்களது கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கயத்தாறு ஒன்றியத்தை சேர்ந்த சூரியமினிக்கன், வெள்ளாளன்கோட்டை வளசால்பட்டி, தெற்குகோனார்கோட்டை புதூர், தெற்குகோனார்கோட்டை புதூர் காலனி, செட்டிகுறிச்சி, வடக்குகோனார்கோட்டை, மஞ்சநம்பிகிணறு ஆகிய பகுதிகளுக்கு சென்று நன்றி தெரிவித்தார். அவருடன் வடக்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளரும் வெள்ளாளன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான கணபதிபாண்டியன், 11வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் கற்பகசெல்வி, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயசங்கர், வெள்ளாளங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பால்தாய், ஊராட்சிமன்ற துணை தலைவர் பால்ராஜ், கழுகுமலை நகர செயலாளர் கோபி, மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் அருணாசலம், சந்தை காந்தையா, சூரியமினிக்கம் இளைஞரணி ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.ஏ.ஜி.துரை மற்றும் பலர் உடன் சென்றனர்.

Tags : Manikarajah ,President ,Kayatharu Union ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...