×

கந்தர்வகோட்டையில் கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கந்தர்வகோட்டை, மார்ச்1: புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அருகே நெறிஞ்சிபட்டி கிராமத்தில் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.வாராப்பூர் அருகே நெறிஞ்சிபட்டியை சேர்ந்தவர் நாகம்மாள். இவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் தடுமாறி விழுந்தது. உடனடியாக கந்தர்வகோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன்பேரில் நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி கூறுகையில், இதுபோன்று தரையை ஒட்டி உள்ள கிணறுகளில் தடுப்பு ஏற்படுத்தி வைத்தால் கால்நடைகள் உள்ளே விழாமல் தடுக்கலாம். கந்தர்வகோட்டை சுற்றிலும் உள்ள கிராமங்களில் அதிகளவில் தரை கிணறுகள் உள்ளன. எனவே மக்கள் தாங்களாகவே கிணறுகளில் தடுப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...