கரூர், மார்ச் 1: டிஎன்எஸ்டிசி ஓய்வூதியர் மற்றும் பென்சனர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் திருமாநிலையூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சுப்ரமணி தலைமை வகித்தார். முத்துக்கிருஷ்ணன், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பன்னீர் செல்வம் வரவேற்றார். இளங்கோ நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியர்களுக்கு நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஒய்வூதியர்களுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.