×

வெள்ளியணை, வாங்கல் அருகே குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை

கரூர், மார்ச் 1: வெள்ளியணை, வாங்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த வெள்ளக்கவுண்டன் பட்டியை சேர்ந்தவர் சரவணன் (34). இவரது மனைவி ஜெயசுதா(30). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெயசுதா, வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை கொண்டார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்

கரூர் மாவட்டம் செல்லிபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(40). இவரது மனைவி கீதாஞ்சலி(35). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தையில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கணவனை பிரிந்து கீதாஞ்சலி வாழ்ந்து வந்தார்.இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு மாட்டி தொங்கினார். ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : women ,family dispute ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது