×

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக கரூர், குளித்தலையில் தர்ணா போராட்டம்

கரூர், மார்ச் 1: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் கரூர், குளித்தலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி மதரசா பாபு தலைமை வகித்தார். மாநில நிர்வாகி முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார்.இந்த கூட்டத்தில், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகளுர், தளவாபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.குளித்தலை: குளித்தலை நகர தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் குளித்தலை பஸ் நிலையம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு குளித்தலை நகர கிளை தலைவர் ஹனிபா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் முஜிபூர் ரகுமான், மாவட்ட பேச்சாளர் சுலைமான் ஆகியோர் சிறப்புரையாறினர். தனியார் கிளை நிர்வாகிகள். அப்துல்லா இப்ராஹிம் முஸ்தபா ஜஹாங்கீர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags : protest ,Karur ,
× RELATED அர்ஜெண்டினாவில்...