×

இருவர் சடலம் மீட்பு; 2 பேர் மாயம் தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி, பிப். 28: கும்மிடிப்பூண்டியில் 2 பேரின் சடலம் மீட்கப்பட்டு, மேலும் 2 பேரை தேடும் பணி நடந்து வரும் நிலையில் அவர்கள் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி கொக்குபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (41). இவருடைய மனைவி வீரம்மாள், மகள் தேவயானி, மகன் பாலமுரளி. ரவிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவா   என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் இரு தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரவி குடும்பத்தினர் திடீரென மாயமாகினர். இதற்கிடையே 5 தினங்களுக்கு முன்பு பழவேற்காடு ஏரியில் வீரம்மாள், தேவயானி ஆகிய இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும் ரவி, பாலமுரளி இருவரையும் போலீசார் பழவேற்காடு ஏரியில் பகுதியில் தேடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ தொடர்ந்து வாட்ஸ்அப், முகநூலில் வெளியாகி வருகிறது. அதில், ‘‘எங்கள் தற்கொலைக்கு கொக்குபாளையம் பகுதியை சேர்ந்த சிவா குடும்பத்தினர்’’ என கூறப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தை வைத்து ஆரம்பாக்கம் போலீசார் சிவா (48), அஜித் (25) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...