×

காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி, பிப். 28:  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து பண்ருட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன் தலைமையில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் மருதமுத்து, மாவட்ட அமைப்பாளர் வெங்கடசாமி, நெய்வேலி தொகுதி செயலாளர் அதியமான், ஒன்றிய செயலாளர் உத்தமன், நகர செயலாளர் கிருஷ்ணராஜ், முகாம் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு