×

சமைக்கும் போது சேலையில் தீ பிடித்து பெண் படுகாயம்

சேலம், பிப்.28: மேச்சேரியை அடுத்த சாம்ராஜ்பேட் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி உஷா நந்தினி (28). இவர் நேற்று காலை, வீட்டில் வழக்கம் போல் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மண்ணெண்ணெய் அவரது உடையில் பட்டு, உடலில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர் மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : salon ,
× RELATED பட்டத்தால் எனக்கு பயம்: ஆர்ஜே பாலாஜி அலறல்