×

தொழிலாளி தூக்கில் தற்கொலை

திருப்பூர்,பிப்.28:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியை சேர்ந்தவர் முத்து சிதம்பரம் (47). இவர் கடந்த 5 ஆண்டாக திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் வாங்கும் சம்பளத்தில் மது குடித்து விட்டு வீட்டிற்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளார். இதனால் முத்துசிதம்பரத்தின் மனைவில் செல்போனில் தொடர்பு கொண்டு குடும்ப செலவிற்கு பணம் அனுப்புமாறு கேட்டதாக தெரிகிறது. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துசிதம்பரத்திடம் அவரின் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இந்த மன அழுத்தத்தால் முத்துசிதம்பரம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து  அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை