×

ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை புதுப்பிக்க வேண்டும் ராஜவர்மன் எம்எல்ஏ வலியுறுத்தல்

ராஜபாளையம், பிப்.28:  ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை புதுப்பிக்க வேண்டும் என சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் வலியுறுத்தினார். ராஜபாளையம் அருகே சங்கரலிங்கபுரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். 16வது வார்டு கவுன்சிலர் கந்தகிருஷ்ணகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சீத்தாராம் சுப்பிரமணியன், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராம்ராஜ்பாண்டியன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகரச்செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய துணைச் செயலாளர் பழனி செல்வம், ஒன்றிய பொருளாளர் சுப்பையாதுரை, தலைமை கழக பேச்சாளர் கிருபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பேசினர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மணி முத்து நன்றி கூறினார். ஏற்பாடுகளை 16 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் சங்கை வேல்முருகன் செய்திருந்தார். விழாவில் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் பேசும்போது, தமிழக முதல்வராக காமராஜர் இருந்த போது துவங்கப்பட்ட ஆலங்குளம் சிமிண்ட் ஆலை தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளது. இதனை புதுப்பிக்கவும், புதிய இயந்திரங்கள் நிறுவி ஆலையை இயக்கினால் சுற்றுப்புறத்தில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே இந்த கோரிக்கையை அடுத்ததாக மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ள மானிய கோரிக்கையில் வேண்டுகோள் விடுக்க உள்ளேன் என்றார்.

Tags : Rajavarman MLA ,cement plant ,Alangulam ,
× RELATED லால்குடியில் கோதண்டராமர் ஆலய ஏகதின ப்ரம்மோத்ஸவம்