×

பணி பாதுகாப்பு வழங்ககோரி நடந்தது திருமயம் அருகே 10 வருடங்களாக பராமரிக்கப்படாத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

திருமயம், பிப்.28: அரிமளம் அருகே குண்டும் குழியுமான சாலை 10 வருடங்களுக்கு மேலாக பராமரிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இருந்து மேல்நிலைப்பட்டி, உசிலம்பட்டி வழியாக கே.புதுப்பட்டி செல்லும் முக்கிய சாலை 10 ஆண்டுகளுக்கு முன்னர் செப்பனிடப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலையில் ஆங்காங்கே சிறு சிறு பள்ளம் ஏற்பட்டு நாளடைவில் சாலையின் பெரும்பகுதி பள்ளங்களாக மாறி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதில் மொத்தமுள்ள சுமார் 7 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் கடந்த ஆண்டு வடகாட்டுபட்டியில் இருந்து பூனையன்குடியிருப்பு வரை உள்ள சுமார் 2 கிலோ சாலை சரி செய்யப்பட்டது.

ஆனால் மீதமுள்ள 5 கிலோ மீட்டர் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் அதிகளவு வாகனங்கள் சென்று வருவதால் நாளுக்கு நாள் சாலை மோசமடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலைப்பட்டி-கே.புதுப்பட்டி சாலையை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road ,Thirumayam ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...