×

விளாத்திகுளத்தில் பைக் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

விளாத்திகுளம், பிப்.28: விளாத்திகுளத்தில் நடந்த பைக் விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.விளாத்திகுளம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி(34). வில்வமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மணி(44). கட்டிட தொழிலாளிகளான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் ஜமீன் கரிசல்குளத்தில் இருந்து விளாத்திகுளத்தை நோக்கி   வந்து கொண்டிருந்தனர்.விளாத்திகுளம் - மதுரை சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது பைக் மீது மணி ஓட்டி வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் கருப்பசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கருப்பசாமியை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், கருப்பசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார் இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மணிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bike accident ,Vilathikulam ,
× RELATED வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர்...