×

திருத்துறைப்பூண்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருத்துறைப்பூண்டி, பிப்.28: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பழனிச்சாமி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிக்கோ திவ்யன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ், டெல்டா ரோட்டரி தலைவர் சிவகுமார், செயலாளர் மாணிக்கவாசகம், பாரதமாதா தொண்டுநிறுவன இயக்குனர் டாக்டர் எடையூர் மணிமாறன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சிவகுமார் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.விழிப்புணர்வு பேரணி பழைய பேருந்து நிலையம், காமராஜர் சிலை, அண்ணா சிலை வழியாக தேரடியில் நிறைவு பெற்றது. பேரணியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மெட் அணிய வேண்டும், மதுபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது, அதிக வேகம் ஆபத்தை தரும் என்பதை வலியுறுத்தி காவல் துறையினர், மாணவ, மாணவிகள் பதாகைகளுடன் சென்றனர்.

Tags : Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்