×

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் திருச்சியில் 25 மாணவர்கள் மீது வழக்கு

திருச்சி, பிப்.27: திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 25 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தப்படுவதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜமால் முகமது கல்லூரி முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பைஸ் அகமது, தாவூத், பிலால், முகமது சாஜித், முகமது ரிபான், முபாரக், முகமது ஹக்கீம், இசாக் அகமது, பைசல், தமிமும் அன்சாரி உள்பட 25 மாணவர்கள் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Tiruchi ,
× RELATED பாஜவுடன் கூட்டணியால் 80 ஆயிரம் ஓட்டு...