×

கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோஷம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கூத்தாநல்லூரில் 12 வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம்

மன்னார்குடி. பிப்.27: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் 12 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மனித நேய ஜனநாயக கட்சி தலைவரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்திம், தமிழக அரசு உடன டியாக சட்டசபையில் தீர்மானம் இயற்ற கோரியும் கூத்தாநல்லூர் காவல் நிலையம் அருகே அனைத்து ஜமாத்தார் சார்பில் கடந்த 15ம் தேதியில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 12 ம் நாளான நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி தலைவரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், இஸ்லாமிய பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். 12 ம் நாளான நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் பங்கேற்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags : Islamists ,Koothanallur ,
× RELATED ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை...