×

திருத்துறைப்பூண்டியில் குடிசை வீடு தீயில் சாம்பல்

திருத்துறைப்பூண்டி, பிப்.27: திருத்துறைப்பூண்டியி–்ல் குடிசை வீடு தீயில் எரிந்து நாசமானது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியான அபிஷேக கட்டளை பகுதியை சேர்ந்தவர் வாணி(39). சுயஉதவிக் குழுவுக்கு பயிற்சி அளிக்கும் இவர், தனது தாய் மனோரஞ்சிதத்துடன் வசித்து வருகிறார். தற்போது புதிய வீடு கட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியில் கூரை வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் கூரை வீடு திடீரென வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. புதிய வீட்டின் மாடியில் போட்டிருந்த கூரை கொட்டகையும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையானது.

இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவாமல் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து சேத மதிப்பு குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.தற்போதைய காலகட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை என்பது தினந்தோறும் விஷம் போல் ஏறி வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாள்கள் என அனைவரும் பேருந்து கட்டண உயர்வினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....