×

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு

பெரம்பலூர், பிப். 27: பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ் எல்சி பொதுத் தேர்வு எழு தும் மாணவ மாணவியர் மாணவியருக்கான அறி வியல் பாட செய்முறைத் தேர்வு நடக்கிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 13ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வும் தினமும் காலையில் 10 மணிக்கு துவங்கி பகல் 1.15 மணி வரை நடக்கிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பெரம்பலூர் மாரிமீனாள், வேப்பூர் குழந்தைராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா