×

நாமக்கல் அருகே ஆயில் கடை உரிமையாளரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்

நாமக்கல், பிப்.27: நாமக்கல் அருகே ஆயில்கடை உரிமையாளரை வீடு புகுந்து தாக்கி, பொருட்கள் சேதப்படுத்திய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே பவித்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ்காந்த் (47). இவர் ஆயில்கடை வைத்துள்ளார். இவர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதன் விபரம்:வங்கியில் ₹38 லட்சம் கடன் வாங்கி, கடந்த சில ஆண்டுக்கு முன் வீடு கட்டினேன். லோன் கட்ட முடியாததால், மூலக்காட்டை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் ₹33 லட்சம் அடமான கடன் வாங்கினேன். இதற்கு அவருக்கு மாதம், மாதம் வட்டி கொடுத்து வந்தேன். இந்நிலையில், கடந்த 4 மாதத்துக்கு முன், கடையை காலி செய்யக்கோரி செல்வராஜ் என்னுடன் தகராறு செய்தார். ஆனால், நான் கடையை காலி செய்து கொடுக்கவில்லை. இதனால் செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் எனது வீட்டுக்குள் வந்து, என்னை அடித்து உடைத்து, வீட்டில் உள்ள பொருட்களை நொறுக்கினார்கள். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதன்பேரில் எருமப்பட்டி போலீசார், செல்வராஜ் அவரது உறவினர்கள் அன்பரசு, கமலம், குமார், ராஜா, வான்மதி சரவணன், இலக்கியா உள்ளிட்ட 9 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : gang ,owner ,Namakkal ,oil shop ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை