×

நிலுவை தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம்

ராஜபாளையம், பிப். 27: நிலுவை தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரி வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு வாசுதேவநல்லூர் மற்றும் ராஜபாளையம் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக மாவட்ட கலெக்டரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பின்னர் ஆலை நிர்வாகத்தினரிடம் இதுவரை விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகைக்கான உரிய வட்டியோடு காலதாமதம் இல்லாமல் தரவேண்டும் என வலியுறுத்தினார். உடன் வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன் மற்றும் பலர் இருந்தனர்.

Tags : Sugarcane farmers ,
× RELATED வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில்...