×

வறட்சியால் நீர் வரத்து பாதிப்பு மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு சரிவு

மஞ்சூர், பிப். 27:  வறட்சியால் நீர் வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
  நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175, பரளி-180, பில்லுார்-100, அவலாஞ்சி-40, காட்டுகுப்பை-30, சிங்காரா-150, பைக்காரா- 59.2, பைக்காராமைக்ரோ- 2, முக்குருத்தி மைக்ரோ-0.70, மாயார்-36, மரவகண்டி-0.75 என மொத்தம் 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் நீர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

மேலும் பவானி ஆற்றில் அந்த நீர் சென்றடைந்து கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.  இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் முதல் தற்போது வரை மழை பெய்யவில்லை. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆறுகள், நீரோடைகளில் நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  நீர்வரத்து குறைந்து, பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ள அப்பர்பவானியில் மொத்த கொள்ளளவான 210 அடியில் தற்போது நீரின் இருப்பு 129 அடியாக குறைந்துள்ளது. இதேபோல் போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு அணைகளிலும் நீர்மட்டம் பெருமளவு சரிந்துள்ளது. அணைகளில் உள்ள நீரின் மூலம் பெரும்பாலான மின்நிலையங்களிலும் மின்சார உற்பத்தி தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருவதுடன், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவும் அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Drought ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!