×

தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகம் எதிரில் பழுதடைந்து சேதமடைந்த சுகாதார நிலைய கட்டிடம்

கரூர், பிப். 26: தாந்தோணிமலையில் செயல்பாடின்றி உள்ள அரசு துணை சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைத்து திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகம் எதிரே அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக இந்த பகுதியில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த சுகாதார நிலையம் செயல்பட்டு வந்த கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் கடந்த ஒரு மாதமாக துணை சுகாதார நிலையம் தற்போது சிவசக்தி நகர் 3வது கிராஸ் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த மாற்றம் காரணமாக இந்த பகுதியில் வசித்து வரும் அனைத்து பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மக்களின் நலன் கருதி, இந்த கட்டிட வளாகத்தை புதுப்பித்து திரும்பவும் இதே பகுதியில் துணை சுகாதார நிலையம் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு துணை சுகாதார நிலைய வளாக கட்டிடத்தை விரைந்து சீரமைத்து புதுப்பொலிவுடன் செயல்பட தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Building ,union office ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...