×

தென்னையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம்

திருப்பூர், பிப். 26:  தென்னை சாகுபடி குறித்த பணிமனை கூட்டம் திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி ராக்கியாபாளையம் பொன்காளியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன் தலைமை வகித்தார். பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும், பேராசிரியருமான ஆனந்தராஜ், துணை இயக்குநர் வடிவேல், வேளாண்மை உதவி இயக்குநர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 உதவி வேளாண்மை அலுவலர்கள் லோகஷ், விநோத், சின்ராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் தென்னை மரங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள், தென்னை மரங்களில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வெள்ளை (ஈக்கள்) பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை, தென்னை மதிப்பு கூட்டல் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கான கிஷோர் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


Tags :
× RELATED மாநில அளவிலான போட்டிகளில்...