×

கிருஷ்ணகிரியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.26: கிருஷ்ணகிரியில் எஸ்டிபிஐ கட்சியினர், டில்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், டில்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவர் அஸ்கர் அலி தலைமை வகித்து பேசினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமத் கலீல், காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு மாநில துணைத்தலைவர் ஆறுமுக சுப்பிரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் திராவிட ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ஷபியுல்லா வரவேற்றார்.  

இப்போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஷாநவாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி ராமச்சந்திரன், காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் முபாரக் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் அன்வர் பாஷா, இர்ஷாத் அகமத், ஷபீர் அகமத், அல்தாப் அகமத் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் கலீல் நன்றி கூறினார்.

Tags : SDPI ,protest ,Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்