×

குருபரஅள்ளி சாலைகளில் மண் திட்டுக்களால் விபத்து அபாயம்

கடத்தூர், பிப்.26: குருபரஅள்ளியில் சாலை போக்குவரத்துக்கு தடையாக உள்ள மண் திட்டுக்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடத்தூர் அடுத்த குருபரஅள்ளி சாலையில் மண் திட்டுக்கள் அதிகளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. கடத்தூர் - குருபரஅள்ளி சாலையில் ஆலமரத்து பஸ் ஸ்டாப் பகுதியானது தாதனூர்- அம்பாலப்பட்டி, கடத்தூர் -அரூர்  சாலை சந்திப்பாக உள்ளது. இந்த சாலையின் நடுவே மண் திட்டுக்கள் அதிகளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மண் திட்டுக்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : roads ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...